
அன்புடையீர்,
வணக்கம். இலுப்பையூர் அருள்மிகு மகா மாரியம்மன் ஆலயக் குடியழைப்பு விழா (சித்திரைத் திருவிழா) – 2018, வருகின்ற மே மாதம் 4 ஆம் தேதி (சித்திரை 21) வெள்ளிக்கிழமை தொடங்கி மே மாதம் 8 ஆம் தேதி செவ்வாய்கிழமை வரை கோலாகலமாக நடைபெற இருக்கின்றது. குடியழைப்பு விழாவினை முன்னிட்டு இலுப்பையூர் ஆ. வே. ச. இளைஞர் அணியினர் நடத்தும் 14 ஆம் ஆண்டு பால்குட விழா மே மாதம் 6 ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை நடைபெற இருக்கின்றது. பால்குடம் எடுக்க இருப்பவர்கள் மே மாதம் 4 ஆம் தேதிக்குள் தே. அரவிந்தனிடம் முன்பதிவு செய்யவும்.
குடிவரி குடும்பம் ஒன்றுக்கு: ரூபாய். 500/-
பால்குடம் எடுக்க நபர் ஒன்றுக்கு: ரூபாய் 150/-
மேலும் விவரங்கள் விரைவில் பதிவேற்றம் செய்யப்படும்.
குடியழைப்பு விழாவிற்கும், பால்குட விழாவிற்கும் கிராமப் பொதுமக்களையும், பக்தகோடி பெருமக்களையும் வருக! வருக!! என வரவேற்கிறோம்.
இப்படிக்கு,
நிர்வாகக்குழு
இலுப்பையூர்.