பேரன்புடையீர்,
வணக்கம். வருகின்ற 13.09.2018 வியாழக்கிழமை விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு, மாலை ஐந்து முப்பது மணி அளவில் நமது ஊரில் வீற்றிருக்கும் அருள்மிகு செல்வ விநாயகருக்கு சிறப்பு பூஜையும், அதனைத் தொடர்ந்து மாலை ஆறு மணியளவில் புதிதாக செய்யப்பட்டுள்ள மூஞ்சூர் வாகனத்தில் விநாயகர் பூ அலங்காரத்துடன் திருவீதி உலா வர வர இருப்பதால் கிராம பொதுமக்கள் அனைவரும் தவறாமல் கலந்துக்கொண்டு முழுமுதற் கடவுளான விநாயகரின் அருளைப் பெற்றுக் கொள்ளும்படி அன்புடன் அழைக்கின்றோம்.
இப்படிக்கு,
நிர்வாகக்குழு.