Iluppaiyur Chithirai Festival 2023 – Special Programmes

இலுப்பையூர் அருள்மிகு மகா மாரியம்மன் ஆலயக் குடியழைப்பு விழா (சித்திரைத் திருவிழா) – 2023, வருகின்ற மே மாதம் 05 ஆம் தேதி (சித்திரை 22) வெள்ளிக்கிழமை தொடங்கி, மே மாதம் 09 ஆம் தேதி செவ்வாய்கிழமை வரை கோலாகலமாக நடைபெற இருக்கின்றது. 

குடியழைப்பு விழாவினை முன்னிட்டு கீழ்கண்ட நிகழ்ச்சிகள் இளைஞர் அணியினரால் சிறப்பாக நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.

  • மே மாதம் 06 ஆம் தேதி – சனிக்கிழமை இரவு – திரைப்பட ஒளிபரப்பு
  • மே மாதம் 07 ஆம் தேதி – ஞாயிற்றுக்கிழமை இரவு – திண்டுக்கல் துரை. சந்தோஷ் வழங்கும் களம் கலைப்பட்டறை குழுவின் நாட்டுப்புற பல்சுவை நிகழ்ச்சி
  • மே மாதம் 08 ஆம் தேதி – திங்கட்கிழமை இரவு – குத்து விளக்கு பூஜை*
  • மே மாதம் 08 ஆம் தேதி – திங்கட்கிழமை இரவு – அருள்மிகு மகா மாரியம்மன் திருவீதி உலா – பூ அலங்காரம்
  • மே மாதம் 08 ஆம் தேதி – திங்கட்கிழமை இரவு – வானவேடிக்கை மற்றும் ஈரோடு ஸ்ரீ வெற்றி விநாயகர் கிராமிய தப்பாட்ட கலைக்குழுவினரின் மேளதாளம்
  • மே மாதம் 08 ஆம் தேதி – திங்கட்கிழமை இரவு – பிரசாதப்பை.
  • மே மாதம் 09 ஆம் தேதி – செவ்வாய்கிழமை – டிரம் செட்*

*பரிசீலனையில் உள்ளது.

மேற்கண்ட நிகழ்ச்சிகளை வெகுசிறப்பாக நடத்துவதற்கு கிராமப் பொதுமக்கள், இளைஞர் அணியினர், மற்றும் பக்தர்கள் என அனைவரும் நன்கொடை தாராளமாக வழங்குமாறு அன்போடு கேட்டுக்கொள்கிறோம்.

நன்கொடை அளிக்க: https://pages.razorpay.com/iluppaiyur2023

இளைஞர் அணியினரின் 2022 – 2023 ஆம் ஆண்டிற்கான வரவு – செலவு கணக்கு விவரம் மே மாதம் 14 ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை மாலை 06.00 மணிக்கு வெளியிடப்படும். 

குடியழைப்பு விழாவின் முழு நிகழ்ச்சி நிரல் அனைத்து நிகழ்ச்சிகளும் இறுதி செய்த பின் வெளியிடப்படும். 

இப்படிக்கு

இளைஞர் அணியினர்.

இலுப்பையூர் குடியழைப்பு விழா (சித்திரைத் திருவிழா): 2022 – நிகழ்ச்சி நிரல்

அன்புடையீர்!
வணக்கம். மக்கள் பேராவலுடன் எதிர்பார்த்துக் கொன்டிருக்கும் இலுப்பையூர் அருள்மிகு மகா மாரியம்மன் ஆலயச் சித்திரைத் திருவிழா (குடியழைப்பு விழா) – 2022 வருகின்ற மே மாதம் 06 ஆம் தேதி (சித்திரை 23) வெள்ளிக்கிழமை தொடங்கி, மே மாதம் 10 ஆம் தேதி (சித்திரை 27) செவ்வாய்கிழமை வரை கீழ்கண்ட நிகழ்ச்சி நிரலின் படி கோலாகலமாக நடைபெற இருக்கின்றது.

நிகழ்ச்சி நிரல்

06.05.2022 வெள்ளிக்கிழமை

இரவு 10.00 மணிக்கு புனித துளைக்கேணிக்கு கரகம் பாலிக்க செல்லுதல்
இரவு 11.30 மணியளவில் கரகம் பாலித்து ஊர் வலம் வருதல்

07.05.2022 சனிக்கிழமை

காலை 11.00 மணிக்கு கரகம் ஊர் வலம் வருதல்
மாலை 06.00 மணிக்கு கரகம் ஊர் வலம் வருதல்

08.05.2022 ஞாயிற்றுக்கிழமை

காலை 07.00 மணிக்கு பால்குடம் பாலிக்க செல்லுதல்
காலை 09.00 மணிக்கு பம்பை மேளம் முழங்க, பால்குடம், கரகம் மற்றும் வேல் ஊர் வலம் வருதல்
காலை 11.00 மணிக்கு அருள்மிகு செல்வ விநாயகர் மற்றும் மகா மாரியம்மனுக்கு பால் அபிஷேகம் நண்பகல் 12.00 மணிக்கு அன்னதானம் நடைபெறும்
இரவு 06.00 மணிக்கு கரகம் மற்றும் வேல் ஊர் வலம் வருதல்
இரவு 07.00 மணிக்கு அருள்மிகு மகா மாரியம்மனுக்கு சந்தன காப்பு பூஜை
இரவு 08.00 மணிக்கு அருள்மிகு மகா மாரியம்மனுக்கு மாவிளக்கு பூஜை

09.05.2022 திங்கள் கிழமை

காலை 11.00 மணிக்கு கரகம் மற்றும் வேல் ஊர் சுற்றி வருதல்
மாலை 04.30 மணி முதல் சுற்று பொங்கல் வைத்தல்
மாலை 06.00 மணிக்கு கரகம் மற்றும் வேல் ஊர் சுற்றி வருதல்
இரவு 08.00 மணிக்கு அருள்மிகு மகா மாரியம்மனுக்கு பொங்கல் பூஜை
இரவு 09.00 மணிக்கு அன்னதானம் நடைபெறும்
இரவு 11.00 மணிக்கு வான வேடிக்கை மற்றும் ஈரோடு ஸ்ரீ வெற்றி விநாயகர் கிராமிய தப்பாட்ட கலைக்குழுவினரின் மேளதாளத்துடன், அருள்மிகு மகா மாரியம்மன் குதிரை வாகனத்தில் பவனி வருதல்

10.05.2022 செவ்வாய் கிழமை

காலை 11.00 மணிக்கு இலுப்பையூர் கிராமத்தில் அமைந்துள்ள அனைத்து தெய்வங்களுக்கும் சிறப்பு பூஜை
நண்பகல் 12.00 மணிக்கு அன்னதானம் நடைபெறும்
மதியம் 02.00 மணிக்கு கரகம் மற்றும் வேல், பம்பை மேளம் முழங்க ஊர் வலம் மற்றும் மஞ்சள் நீராடி விளையாடுதல்
மாலை 06.00 மணியளவில் கரகம் குடி விடுதல்

அனைவரும் இலுப்பையூர் குடியழைப்பு திருவிழாவில் கலந்து கொண்டு அம்மன் அருளைப் பெறுமாறு அன்புடன் அழைக்கிறாம்!!!💐💐💐

இப்படிக்கு,
ஆ.வே.ச இளைஞர் அணி,
மற்றும் விழாக்குழுவினர்
இலுப்பையூர்.