பதினான்காம் ஆண்டு பால்குட விழா – 2018

இலுப்பையூர் ஆ.வே.ச. இளைஞர் அணியினர் நடத்தும் பதினான்காம் ஆண்டு பால்குட விழா, மே மாதம் 06 ஆம் தேதி (சித்திரை 23), ஞாயிற்றுக்கிழமை காலை 07.00 மணிக்கு தொடங்க இருக்கின்றது. பால்குடம் எடுக்க விரும்புகின்றவர்கள் மே மாதம் 04 ம் தேதி (வெள்ளிக்கிழமை) இரவு 11.59க்குள் முன்பதிவு செய்யுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

பால் குடம் எடுக்க நபர் ஒன்றுக்கு கட்டணம் : ரூ. 150/-

பால் குடம் எடுப்பதுப் பற்றிய மேலும் விவரங்களுக்கு தொடர்பு கொள்க :
தே. அரவிந்தன் (+91 – 96988 08960, +91 – 86670 80269), த. ஆனந்தன் (+91- 96987 94856).

பால்குடம் எடுப்பவர்கள் முன்பதிவு செய்வதற்கு இங்கு கிளிக் செய்யவும்.

பால்குடம் எடுப்பதற்கான கட்டணம் செலுத்துவதற்கு இங்கு கிளிக் செய்யவும்.

குடியழைப்பு விழா – 2018

அன்புடையீர்,

வணக்கம். இலுப்பையூர் அருள்மிகு மகா மாரியம்மன் ஆலயக் குடியழைப்பு விழா (சித்திரைத் திருவிழா) – 2018, வருகின்ற மே மாதம் 4 ஆம் தேதி (சித்திரை 21) வெள்ளிக்கிழமை தொடங்கி மே மாதம் 8 ஆம் தேதி செவ்வாய்கிழமை வரை கோலாகலமாக நடைபெற இருக்கின்றது. குடியழைப்பு விழாவினை முன்னிட்டு இலுப்பையூர் ஆ. வே. ச. இளைஞர் அணியினர் நடத்தும் 14 ஆம் ஆண்டு பால்குட விழா மே மாதம் 6 ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை நடைபெற இருக்கின்றது. பால்குடம் எடுக்க இருப்பவர்கள் மே மாதம் 4 ஆம் தேதிக்குள் தே. அரவிந்தனிடம் முன்பதிவு செய்யவும்.

குடிவரி குடும்பம் ஒன்றுக்கு: ரூபாய். 500/-

பால்குடம் எடுக்க நபர் ஒன்றுக்கு: ரூபாய் 150/-

மேலும் விவரங்கள் விரைவில் பதிவேற்றம் செய்யப்படும்.

குடியழைப்பு விழாவிற்கும், பால்குட விழாவிற்கும் கிராமப் பொதுமக்களையும், பக்தகோடி பெருமக்களையும் வருக! வருக!! என வரவேற்கிறோம்.

இப்படிக்கு,

நிர்வாகக்குழு

இலுப்பையூர்.