குடியழைப்பு விழா (சித்திரைத் திருவிழா) – 2018: நன்றி அறிவித்தல்

மே மாதம் 4 ஆம் தேதி (சித்திரை 21), வெள்ளிக்கிழமை இரவு தொடங்கி, வெகு விமரிசையாக நடைபெற்று வந்த இலுப்பையூர் அருள்மிகு மகாமாரியம்மன் ஆலய குடியழைப்பு விழா (சித்திரைத் திருவிழா) – 2018, மே மாதம் 8 ஆம் தேதி (சித்திரை 25) செவ்வாய் கிழமை இனிதே நிறைவுற்றது. குடியழைப்பு விழா மற்றும் பால்குட விழா சீரும் சிறப்புமாக நடைபெற நன்கொடையினை தாராளமாக தந்து உதவிய நல்லுள்ளங்களுக்கும், பல்வேறு நிகழ்ச்சிகளை ஏற்பாடு செய்த நிர்வாகிகளுக்கும், ஒருங்கிணைப்பாளர்களுக்கும் மற்றும் இரவுப்பகல் பாராமல் களப்பணி ஆற்றிய தன்னார்வலர்களுக்கும் மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறோம். மேலும், குடியழைப்பு விழாவிற்கு நேரில் வரமுடியாதவர்களும் இணையம் வழியாக கண்டுகளிக்கும் வகையில் புகைப்படம் மற்றும் வீடியோ எடுப்பதில் உதவியவர்களுக்கும் நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறோம். இறுதியாக குடியழைப்பு விழாவிற்கு நேரில் வருகைப்புரிந்து சிறப்பித்த அனைவருக்கும், பணிச்சூழல் மற்றும் தவிர்க்க முடியாத காரணங்களால் வரமுடியாமல் போனாலும் தொடர்ந்து ஆதரவும் ஊக்கமும் அளித்துவரும் அனைவருக்கும் நன்றி! நன்றி!!

இலுப்பையூர் குடியழைப்பு விழா- 2018: முழு புகைப்படத் தொகுப்பினைக் காண:
https://photos.app.goo.gl/SkP7vL2Ks51KDU4J7

இப்படிக்கு,
விழாக்குழுவினர் மற்றும்
இளைஞர் அணியினர்
இலுப்பையூர்.

பதினான்காம் ஆண்டு பால்குட விழா – 2018

இலுப்பையூர் ஆ.வே.ச. இளைஞர் அணியினர் நடத்தும் பதினான்காம் ஆண்டு பால்குட விழா, மே மாதம் 06 ஆம் தேதி (சித்திரை 23), ஞாயிற்றுக்கிழமை காலை 07.00 மணிக்கு தொடங்க இருக்கின்றது. பால்குடம் எடுக்க விரும்புகின்றவர்கள் மே மாதம் 04 ம் தேதி (வெள்ளிக்கிழமை) இரவு 11.59க்குள் முன்பதிவு செய்யுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

பால் குடம் எடுக்க நபர் ஒன்றுக்கு கட்டணம் : ரூ. 150/-

பால் குடம் எடுப்பதுப் பற்றிய மேலும் விவரங்களுக்கு தொடர்பு கொள்க :
தே. அரவிந்தன் (+91 – 96988 08960, +91 – 86670 80269), த. ஆனந்தன் (+91- 96987 94856).

பால்குடம் எடுப்பவர்கள் முன்பதிவு செய்வதற்கு இங்கு கிளிக் செய்யவும்.

பால்குடம் எடுப்பதற்கான கட்டணம் செலுத்துவதற்கு இங்கு கிளிக் செய்யவும்.

குடியழைப்பு விழா – 2018

அன்புடையீர்,

வணக்கம். இலுப்பையூர் அருள்மிகு மகா மாரியம்மன் ஆலயக் குடியழைப்பு விழா (சித்திரைத் திருவிழா) – 2018, வருகின்ற மே மாதம் 4 ஆம் தேதி (சித்திரை 21) வெள்ளிக்கிழமை தொடங்கி மே மாதம் 8 ஆம் தேதி செவ்வாய்கிழமை வரை கோலாகலமாக நடைபெற இருக்கின்றது. குடியழைப்பு விழாவினை முன்னிட்டு இலுப்பையூர் ஆ. வே. ச. இளைஞர் அணியினர் நடத்தும் 14 ஆம் ஆண்டு பால்குட விழா மே மாதம் 6 ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை நடைபெற இருக்கின்றது. பால்குடம் எடுக்க இருப்பவர்கள் மே மாதம் 4 ஆம் தேதிக்குள் தே. அரவிந்தனிடம் முன்பதிவு செய்யவும்.

குடிவரி குடும்பம் ஒன்றுக்கு: ரூபாய். 500/-

பால்குடம் எடுக்க நபர் ஒன்றுக்கு: ரூபாய் 150/-

மேலும் விவரங்கள் விரைவில் பதிவேற்றம் செய்யப்படும்.

குடியழைப்பு விழாவிற்கும், பால்குட விழாவிற்கும் கிராமப் பொதுமக்களையும், பக்தகோடி பெருமக்களையும் வருக! வருக!! என வரவேற்கிறோம்.

இப்படிக்கு,

நிர்வாகக்குழு

இலுப்பையூர்.